Friday, September 21, 2007

அறிமுகப் பதிவு

வள்ளுவனின் வான் மறையையும் பாரதியின் பாவடிகளையும் படிக்கின்ற போது என் எண்ணம் சிறகடித்துப் பறக்கும். இவர்களால் எப்படி - இப்படி எழுத முடிந்தது? என்று.
இவர்கள் பார்த்ததை எழுதினார்களா? இல்லை வாழ்ந்ததை எழுதினார்களா?
வாழ்க்கை வரலாறே இல்லாத வள்ளுவன் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டினானே!
பாராத வாழ்வினைப் பார்த்து விட்டதாக பாடினானே பாரதி! இல்லை இல்லை! வாழ்ந்தானே பாரதி!
இவர்களின் எழுத்துகள் சொல்வதைப் போல் என் எண்ணம் பேச வேண்டும்! எழுத்து பேச வேண்டும்! இந்த பாரதத்தை பார் பேச வேண்டும்!
அதற்கு என் எழுதுகோல் இங்கே உலவ வேண்டும்!

2 comments:

Noddykanna said...

Mei nilaikkum!
Mei Thamizh suvaikkum!
Mei inbam perruga Vaazhthukkal!

Saayaadha Koel-
Yezhudhu koel valam vara Vaazhthukkal!

செல்விஷங்கர் said...

நன்றி நாடிக்கண்ணா !!!

அன்புடன் ..... மெய்