Thursday, October 18, 2007

எனக்கொன்றும் புரியவில்லை

அதென்ன அப்பா என்றால்

செய்தித்தாள் படிப்பார்!

அம்மா எப்பொழுதும்

அடுக்களையில்! சமைப்பார்!

எது நடந்தாலும் ஏன் ?

எப்படி அது அவளுக்குத்

தெரியாமல் போனது ?

இது கூடத் தெரியாவிட்டால்

இவள் என்ன பெண் ?

இசைக்கின்ற வானொலி செவியில்

பிள்ளைகளின் சீருடை

மடித்து வைத்த காலுறை

அடுக்கி வைத்த புத்தகம்

அடுத்த நாள் செய்ய வேண்டிய

இன்றைய வீட்டு வேலை!

அலுவலகம் செல்ல அமைதியாய்

இருக்கும் கைப்பை !

கட்டும் போது மடிப்பில்

தெரியும் காப்பிக் கரை!

எப்பொழுது மூச்சு விடுவாள் இவள்!

இத்தனைக்குப் பின்னும்

இவளுக்கு என்ன தெரியும்

ஏதாவது புரியுமா? இது வேத வாக்கு!

இருந்தாலும் அவள்தான் இங்கே உலகம்!

2 comments:

Anonymous said...

Nalla Kavidhai. Vazhthukal.

செல்விஷங்கர் said...

நன்றி நண்பரே