Sunday, October 7, 2007

அமைதி

ஆண்டவன் சந்நிதியில் கிடைப்பது !
அருந்தமிழின் சுவையில் திளைப்பது !
ஆற்றலின் விளிம்பில் அலை பாய்வது !
ஆசையை நினைத்து அன்பில் நிலைப்பது !
இருப்பதைக் கொடுத்து இன்முகம் காண்பது !
துயரத்தைப் போக்கி துன்பம் துடைப்பது !
மழலையின் சிரிப்பில் மடியில் காண்பது !
இன்னிசையின் மென்மையில் சுவைப்பது !
இலக்கியத்தின் இதழ்களில் மலர்வது !
நெடுந்தூரப் பயணத்தின் நிம்மதியில்
உணர்வது ! அடுத்தவ்ரின் அன்புச்
சிரிப்பில் சிந்துவது ! ஆக்கத்தின்
வளர்ச்சியில் வாழ்வது ! அமைதி !

1 comment: