வெண் முத்துக்களாய் சிதறுகின்றன
எங்கெங்கோ செல்லும் மேகங்கள் !
மின்னும் விண்மீன்கள் கதிர்பரப்பும்
கார்மேகத்தை கண்சிமிட்டி அழைக்கின்றன !
காரிருளில் வானம் ஒளிபரப்பும்
வண்ணக் கோலங்கள் இவை !
வெள்ளை மனமாய் விரிந்து
கிடக்கின்றன சிந்தனைப் பூக்கள் !
சிதறும் மழைத்துளிகள் மண்ணைக்
காண மறுக்குமா ? கண்ணைக்
காக்கும் இமையல்லவா நீர்த்துளிகள் !
சிந்தாமல் சிதறாமல் சிறுவிரல்கள்
அள்ளுகின்ற மணல் பரப்பாய்
எண்ணங்கள் எழுந்தாடும் எங்கும் !
வெட்ட வெளியில் நட்ட மரங்கள்
நாளும் சிந்தும் சிறுபூக்கள் !
வெள்ளை மனத்திற்கு வேர்களாய் !
சிதறுகின்ற பனித்துளியாய் சிந்தனைக்
காற்று ! மனத்தில் மட்டுமல்ல
மனிதத்திலும் பூத்துக் குலுங்கும், !
கவிதை ஆக்கம் : செல்வி ஷங்கர்
14.06.2013
Friday, June 14, 2013
Subscribe to:
Posts (Atom)